tag:blogger.com,1999:blog-7135976914229922195.post1603995036471194399..comments2024-03-21T08:54:12.680-07:00Comments on Village Gods of Tamil Nadu: Chenpaka moorthi AyyanarRaja Thathahttp://www.blogger.com/profile/09656365715443764793noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7135976914229922195.post-239007462768931782010-04-01T09:03:07.619-07:002010-04-01T09:03:07.619-07:00.....continued from above
ஒரு முறை அந்த ஊருக்கு வி........continued from above<br />ஒரு முறை அந்த ஊருக்கு விழாவிற்காக வந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் திரும்பும்போது அந்த வழியே சென்றனர். சில மையில்கள் போன பின் தங்கள் குழந்தையைக் காணவில்லை எனத் குழந்தையை தேடிக்கொண்டு அந்த ஆலயத்தின் பக்கம் சென்றனர். அப்போது ஆலயத்தின் உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது, 'உங்கள் மகள் பத்திரமாக தூங்கிக் கொண்டு உள்ளாள். நாளை காலை வந்து அவளை அழைத்துப் போகலாம்'. ஆனால் அதைக் கேட்காதவர்கள் ஆலயத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் அவர்கள் மகள் அங்கு சிலையாக மாறி நின்று இருந்ததைக் கண்டார்கள். அது முதல் அவர்கள் அந்த ஆலயத்தின் பக்தர்கள் ஆயினர். அது போல பல சம்பவங்கள் நடந்தன. மக்கள் ஜமீன்தாரிடம் மீண்டும் சென்று அதைப் பற்றிய புகார்களைத் தர அவரும் ஜோதிடரை அழைத்துக் கேட்டார். ஜோதிடர் அந்த கறுப்பர் ஆலயத்தை ஐயனாரின் இடதுபுறத்துக்கு மாற்றுமாறு யோசனைக் கூறினார். அவர்கள் அப்படியே அதை செய்ததும் அனைத்து தொல்லைகளும் தீர்ந்தன.<br />அந்த ஆலயம் அமைக்கப்பட்டபோது கருத்த வேலர் என்பவரே அதன் பூசாரியாக இருந்தார். அவர் வம்சாவளியினர் அதை நிர்வாகிக்கின்றனர். கருத்த வேலருக்குப் பின் வந்த சிவானடியார் என்ற அவர் மகன் மீது மக்கள் பொறாமை கொண்டனர். அவர் சந்தனக் கருபரின் பக்தர். பிரபலமானவராக ஆனார். ஆகவே அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவரை ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திவிட்டதாக பொய் சொல்லி அவர் தலையை துண்டித்து மலை மீது தூக்கி எறிய வேண்டும் என்றனர். அவரைக் காப்பாற்றுவதற்காக ஜமீந்தார் ஓடி வந்தார். ஆனால் அதற்கு முன்பே காரியம் முடிந்து விட்டது. இறக்கும் முன்சிவனடியார் அவர் ஆசை என்ன எனக் கேட்டபோது அவர் தன்னுடைய ரத்தம் எந்த அளவு பரவுகின்றதியோ அத்தனை இடத்தையும் தனது சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டு இருந்தார். அவர் தலையை துண்டித்ததுதான் தாமதம் எங்கிருந்தோ வந்த சூறாவளி மழையினால் அவர் சிந்திய ரத்தம் எட்டு கிலோ தொலைவு வரை சென்றுவிட ஜமீந்தார் அவர் வேண்டுகோளை நிறைவேற்றினார்.<br />ஐயனார் மற்றும் சந்தனக் கருப்பரைத் தவிர அந்த ஆலயத்தில் மேலும் பல கடவுள் சிலைகள் உள்ளன. ஐயனாருக்கு உதவ இரண்டு பூதங்களும் உள்ளன. அங்குள்ள பிற கடவுட்கள் பத்ர காளி, ராக்காயி, ஆண்டிச்சாமி, சந்தன லிங்கம், மாயனைக் கருப்பு, வீர பத்திர சாமி, பேச்சியம்மன் போன்றவர்கள். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் குதிரை இழுப்பு என்ற விழா நடைபெறுகின்றது . இரண்டு மண் குதிரைகள் செய்யப்பட்டு தனிஹியம் என்ற கிராமத்தில் இருந்து சம்பிரதாயமாக அங்கு அழைத்து வரப்படுகின்றது. அதற்க்கு முன்னால் சந்தனக் கருப்புக்கு சந்தன அபிஷேகம் நடைபெறும். அதில் ஒரு குதிரை ஐயனாரின் போர் குதிரையாம் . மற்றது தேவேந்திரனின் வாகனமாம். பூரணையும் புஷ்கலையும் குதிரைகளின் மகள்களாம். ஆகவே அந்த குதிரைகள் தமது மகளைக் காண வருவதாக இதீகம் உள்ளது. கிராமத்தின் நலனுக்காக தேவேந்திரனிடம் பூரணையும் புஷ்கலையும் வேண்டிக்கொள்ள அவர் சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவர் தனது பசுவை அந்த கிராமத்துக்கு அனுப்பி நல்லது நடக்க வைப்பாராம். அந்த பசுவின் பெயர் நாச்சங்காளை . அந்த சடங்கின் சம்பிரதாயமாக ஒரு பசுவின் கன்றை பிடித்து வந்து நன்றாக மஞ்சள் நீராட்டி வணங்குவார்கள். அதன் பின் அதை விட்டு விடுவார்கள். மற்ற கடவுட்களை மகிழ்விக்க மாட்டை அடக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. ஏன் எனில் அங்கு சிந்தப்படும் சிறிய அளவிலான மனித ரத்தத்தினால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஐயனாரை கலந்தாலோசிக்காமல் எவரும் முடிவு எடுப்பது இல்லையாம்.<br />(Translated into Tamil by santhipriaya)N.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-60876366785750881222010-04-01T09:02:31.765-07:002010-04-01T09:02:31.765-07:00மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள...மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.<br /><br />செம்பாக மூர்த்தி ஐயனார்<br />பீ. ஆர். ராமச்சந்திரா<br /><br />மதுரையில் இருந்து திண்டுக்கல் போகும் பாதையில் கோடை ரோடு என்ற இடத்தின் அருகில் உள்ளதே ஐயம்கோட்டை என்ற கிராமம். ஒரு காலத்தில் அதையும் இன்னும் நான்கு கிராமங்களையும் சேர்த்து அம்மாய நாயக்கன் ஜமீன் என்று அழைக்கப்பட்டு வந்தது. அதை காமிய நாயகன் என்பவர் நிர்வாகித்து வந்தார். அந்த நேரத்தில் மழை இன்றி அந்த இடங்களில் பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் தவித்துப் போன மக்கள் அந்த ஜமீன்தாரிடம் சென்று தம்மை காப்பாற்றுமாறு வேண்டினார்கள். அவர் உடனே ஒரு ஜோதிடரை அழைத்து அது பற்றிக் கேட்க அவரும் அந்த ஊரில் ஐயனாருக்கு ஒரு ஆலயம் அமைத்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூற தயங்காமல் ஜமீன்தாரும் பூரணை மற்றும் புஷ்கலயையும் சேர்த்து ஐயனாருக்கு ஒரு ஆலயம் கட்டினார். அந்த நேரத்தில் இருந்த பாண்டிய மன்னனின் பெயர் செம்பாக மூர்த்தியாகும். ஆகவே அந்த ஆலயத்தில் இருந்தவர் செம்பாக மூர்த்தி ஐயனார் என்று அழைக்கப்பட்டார். அது முதல் அந்த கிராமத்தில் அனைத்தும் நல்லபடியாகவே நடந்தன. நல்ல மழை பெய்தது.<br />ஒரு நாள் காட்டில் சென்று மாடு மேய்ப்பவன் ஒரு இடத்தில் ஓர் பெட்டியில் முழுவதும் பன மர மர இலைகள் உள்ளதைக் கண்டு பயந்து ஓடி வந்தான். ஊரில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பெட்டி அங்கு இல்லை. ஆகவே அதை பற்றிய சேதியை கேட்ட ஜமீந்தார் அந்த இடத்தில் உள்ள வேப்ப மரத்தை வெட்டிவிட்டு அங்கு ஐயனாருக்கு ஒரு ஆலயம் அமைக்கலாம் எனக் கூறினார். அந்த மரத்தை வெட்டுவதற்கு அனுப்பிய ஆளுக்கு சாமி வந்து கூறினான் 'என் பெயர் சந்தனக் கருப்பன் . எங்கு செல்வது எனப் புரியாமல் நான் இந்த மரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் '. அதை மக்கள் நம்பவில்லை. ஆகவே அவர் மறு நாள் அதே இடத்துக்கு வந்தால் தான் அங்கு இருந்ததை நிரூபிப்பதாகக் கூற மறுநாள் அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் பனை ஓலையினால் செய்த பெட்டி இருந்தது. அதனுள் சந்தனக் கருப்பின் சிலையும் இருந்தது. சந்தனக் கருப்பு வந்தவர்களிடம் கூறினார் 'தான் கேரளாவில் இருந்து வந்துள்ளதாகவும், அங்கு அவர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்பதினால் அனைவரையும் தான் துன்புறுத்தியதாகக் கூறினார். அதனால் தான் இந்த இடத்துக்கு நதி மூலம் வந்ததாகக் கூறி தன்னை வழிபாட்டு வந்தால் தானும் அந்த கிராமத்தைப் பாதுகாப்பதாக உறுதி கூறினார்'. ஆகவே அவர்கள் சந்தனக் கருப்புக்கும் அங்கு ஐயனார் ஆலயத்தின் வலது பக்கத்தில் ஒரு ஆலயம் அமைத்தனர். சந்தனக் கறுப்பினால் அவர்கள் பல நல்ல பயன்களை அடைந்தாலும் சில தொந்தரவுகளும் இருந்து வந்தன. எவராவது தப்பித் தவறி ஆலயத்தின் பக்கம் செருப்போடு சென்றால் அவர்கள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். ஆகவே மக்கள் அந்த ஆலயத்தின் பக்கமே செல்ல பயந்தனர்.<br />..continued belowN.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.com