tag:blogger.com,1999:blog-7135976914229922195.post4376525826021220294..comments2024-03-21T08:54:12.680-07:00Comments on Village Gods of Tamil Nadu: Thiruvettazhaigaya Ayyanar of Peyadi kottaiRaja Thathahttp://www.blogger.com/profile/09656365715443764793noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7135976914229922195.post-74311067735883139322010-04-03T09:13:00.564-07:002010-04-03T09:13:00.564-07:00...continued from above
மிருக பலி கருப்பருக்கு தரப......continued from above<br />மிருக பலி கருப்பருக்கு தரப்படுகின்றது. ஆகவே அவர் மிருகங்களை கிராமத்தின் வெளியே எடுத்துச் செல்ல விடுவது இல்லை. எத்தனை மிருகங்கள் பலி தரப் படுகின்றதோ அத்தனை இறைச்சியும் அந்த ஊரில் உள்ளவர்களுக்கே தரப்படுகின்றது. சித்ரா பவுர்ணமியில் பால் காவடி எடுக்கப் படுகின்றது. மாட்டை அடக்கும் விழாவும் நடைபெறுகின்றது . ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் களி மண்ணால் செய்த குதிரைகளை காணிக்கையாகத் தருகிறார்கள். செங்காணம் என்ற கிராமத்தில் அவை செய்யப்படுகின்றன. அங்கிருந்து அவற்றை ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். கருப்பன்னருக்கு எதிரில் சானை சாமி உள்ளார். குழந்தைகள் பிறந்தால் பதிமூன்றாம் நாள் காதணிகளும் மூக்குத்தியும் காமாட்சி அம்மனுக்கு காணிக்கையாக தரப் படுகின்றது. கோழி பலியும் தரப் படுகின்றது. அப்படி செய்யாவிடில் குழந்தைகளாய் தூங்க விடாமல் அவை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. காமாட்சி அம்மன் காதலினால் மரணம் அடைந்ததினால் அவளுக்கு மஞ்சள் நீராடிய பின் அவர்கள் குளிக்கக்கூடாது. அப்படி அவர்கள் செய்தால் தோல் வியாதி ஏற்படும். பெண்கள் கழுத்தில் அணியும் தாலி கூட சிவப்பு நிறத்திலேயே உள்ளது.<br />(Translated into Tamil by Santhipriya)N.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-4520369380887589162010-04-03T09:12:27.183-07:002010-04-03T09:12:27.183-07:00மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள...மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.<br /><br />பேயாடிக் கோட்டை திருவேட்டழைகாய ஐயனார்<br />பீ. ஆர். ராமச்சந்திரா<br /><br />புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகில் உள்ள பேயாடிக் கோட்டை என்பது ஆவுடையார் கோவிலில் இருந்து இருபத்தி ஏழு கிலோ தொலைவில் உள்ளது. பாம்பாரு என்ற பகுதி அதனுள்ளாகச் செல்கின்றது. அதில் பனை மரங்களும் அடர்த்தியான புற்களும் உள்ளதால் அங்கு மாடுகளை மேய்க்க இடையர்கள் செல்வார்கள். ஒரு முறை குளத்தூரில் இருந்து தலித் இனத்தை சேர்ந்த ஒரு இடையன் அங்கு மாட்டை மேய்க்க வந்தான். அவன் ஒரு பேரிச்சம் பழக் கொட்டையை உடைக்க கல் மீது வைத்து கத்தியால் அடித்தான். அந்த கல்லில் இருந்து ரத்தம் வடிந்தது. பயந்து போய் அவன் மயங்கி விழுந்து விட்டான். அப்போது அவன் கனவில் வந்த ஐயனார் தான்தான் திருவேட்டழைகாய ஐயனார் எனவும் தன்னை அவன் மீட்டு விட்டான் என்பதினால் அவனை அந்த கல்லின் பூசாரியாக ஆகி தினமும் பொங்கல் படைக்குமாறு கூறியது. அவனோ ஏழை. ஆகவே அவன் அந்த மாட்டின் சொந்தக்காரரின் மனைவியிடம் சென்று சிறிது அரிsi வங்கிக் கொண்டு சிறிது பசுவின் பாலை கறந்து அதை பொங்கலாக்கி தந்தான். அவன் எதற்காக தினமும் அரிசியை வாங்கிக் கொண்டு போகின்றான் என்பதை கண்டு பிடிக்க மாட்டின் சொந்தக்காரன் அவனை பின் தொடர்ந்து போய் பார்த்தான். அவன் செய்வதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து அவனை விசாரிக்க அவன் அனைத்தையும் கூறிவிட்டான். அதன் பின் அந்த மாட்டின் சொந்தக்கரனே அனைத்தையும் அதற்குத் தர மக்களும் அந்த ஆலயத்துக்கு வரலாயினர். கால்நடைகள் உடல் நலமின்றிப் போனால் அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து அதன் மீது தடவினால் அவை குணமாகின. ஆனால் சில உயர்சாதியினர் தலித்தின் கையில் இருந்து வீபுதியை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் எதிரில் ஐயனார் பாம்பு போலச் சென்று பயமுறுத்தினார். ஆகவே அந்த கிராமத்தினர் ஒரு பிராமண பூசாரியை நியmikk க அவர் தனது மகளுடன் சென்று அந்த கல்லை பூஜிக்கலானார். ஒரு நாள் அவர் தவறுதலாக தனது மகளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றார். பின்னர் அது நினைவுக்கு வர உள்ளே செல்ல ஆலயத்தை திறக்கும்போது ஒரு குரல் வந்தது ' உன் மகள் நலமாக என்னிடம் உள்ளாள். நாளை வந்து அழைத்துப் போ'. ஆனால் அதை ஏற்க மறுத்த பூசாரி ஆலயத்தின் கதவில் தன தலையால் முட்டத் துவங்க கோபம் கொண்ட திருவேட்டழைகாய ஐயனார் அந்தப் பெண்ணை கண்ட துண்டமாக்கி வெளியில் வீசினார். அவரைப் பார்த்து பிராமண பூசாரி சாபமிட்டார், 'இனி நீ கீழ் சாதியினரால்தான் பராமரிக்கப் படுவாய் . மற்றவர்கள் உன்னை கவனிக்க மாட்டார்கள்'. அது முதல் தலித்துகள்தான் அந்த ஆலயத்தின் பூசாரிகளாக உள்ளனர். அந்த ஆலயத்தின் எதிரில் குளம் உள்ளது. கடலின் கரையில் கறுப்பர், காளி, பேச்சியம்மன் மற்றும் சோணை என்பவர்களே உள்ளனர். அந்த நான்கு தேவதைகளும் அந்த குளத்தில் குளித்தப் பின் கடலை நோக்கிச் செல்கையில் அவர்களை திருவேட்டழைகாய ஐயனார் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கச் சொன்னார். ஆலயத்தில் பெரியண்ணச் சாமியும் காமாட்சி அம்மனும் உள்ளனர். காமாட்சி அம்மனுக்கு ஏழு சகோதரர்கள். அவள் பெரியண்ணச் சாமியின் மீது காதல் கொண்டாள். அவளுடைய சகோதரர்கள் அவர்கள் காதலை ஏற்க மாட்டார்கள் என்று எண்ணி அடுத்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை திருவேட்டழைகாய ஐயனார் ஆலயத்தின் அருகில் பிடித்து சிரச் சேதம் செய்துவிட்டார்கள். ஆகவே ஐயனார் அவர்களை கடவுளாக்கி அங்கேயே தங்க வைத்தார். காமாட்சி அம்மன் கருப்பன்னசாமியால்தான் உயிரை இழக்க வேண்டி இருந்தது என எண்ணிய ஐயனார் கருப்பண்ணசாமி மேல் கூரை இல்லாத இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் வெயிலினாலும் மழையினாலும் அவதிப்பட வேண்டும் எனவும் சாபமிட இன்றும்கருப்பண்ணசாமிக்கு மேல் கூரை இல்லாத ஆலயமே உள்ளது.<br />ஐயனார் கால்நடைகளைப் பாதுகாக்கின்றார் என அனைவரும் நினைகின்றனர். உடல் நலமில்லாத கால்நடைகளை ஐயனாரின் ஆலயத்தில் விட்டு விட்டுச் செல்கிறார்கள். அது போல அறுவடை நேரத்தில் தானியங்களுக்கு ஏற்படும் குறையை நிவர்த்திக்க அறுவடை முடிந்ததும் அளவு பார்க்காமல் எத்தனை முடியுமோ அத்தனை தானியத்தை ஐயனாருக்கு அளிக்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் உள்ளது. ஐயனார் சைவம் என்பதினால் பொங்கலை படைகின்றார்கள் . <br />.....continued belowN.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.com