tag:blogger.com,1999:blog-7135976914229922195.post5245712494319051043..comments2024-03-21T08:54:12.680-07:00Comments on Village Gods of Tamil Nadu: Changili karuppar of Kizha vayalRaja Thathahttp://www.blogger.com/profile/09656365715443764793noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7135976914229922195.post-79942412810643823182013-04-11T21:57:53.747-07:002013-04-11T21:57:53.747-07:00மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள...மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.<br /><br />கீழ வயல் சங்கலிக் கறுப்பர்<br /><br />ஆங்கிலத்தில் : பீ. ஆர். ராமச்சந்திரா<br />தமிழில்: சாந்திப்பிரியா <br /><br />சிவகங்கை மாவட்டத்தில் சிங்கண்ணம்புரியின் அருகில் உள்ள கிராமமே கீழவயல் என்பது. அதன் அருகில் நாத கலை பட்டினம் என்ற வளர்ச்சி அடைந்த ஊர் உண்டு. அந்த ஊரில் இருந்தவர்கள் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டு உள்ளனர் என்பதினால் பொறாமை கொண்ட சில மந்திரவாதிகள் அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரத் துவங்கினார்கள். அந்த கிராமத்தில் ஒளி விடை ஐயனாரின் ஆலயம் இருந்தது. ஆகவே மக்கள் அங்கு சென்று ஐயனாரிடம் முறையிட்டனர். அவர் தந்து சகோதரியான மதுரை மீனாஷியை சந்தித்து அவளுடைய ஆலோசனைக் கேட்டார் . அவள் தன்னிடம் உள்ள 121 படையினரில் எவரை வேண்டுமானாலும் அழைத்துப் போகுமாறு கூறினாள். ஐயனாருக்கு சங்கலிக் கறுப்பர் மீதே அதிக நம்பிக்கை இருந்ததினால் அவரையே அழைத்துச் சென்றார். சங்கிலிக் கறுப்பர் அங்கு சென்று மிகப் பெரிய உருவை எடுத்து மந்திரவாதிகளை கல் சிலைகளாக்கி விட்டார். அதை முடித்தப் பின் தனக்கு என்ன வெகுமதி தர உள்ளாய் என ஐயனாரிடம் அவர் கேட்க ஐயனாரோ அந்த ஊரிலும் அதை சுற்றி உள்ள பத்து கிராமங்களிலும் சங்கிலிக் கருப்பருக்கே தமது தேவதை என முதல் மரியாதை தருவார்கள் என்று கூறினார். ஆகவே அதுமுதல் கீழவயலை சுற்றி இருந்த பத்து கிராமங்களுக்கும் அவரே காவல் தெய்வமானார். ஆகவே அவருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அவரோ சூரிய ஒளி தன் முகத்தின் மீதும், மழை தன் உடம்பின் பின் பகுதியிலும் விழுமாறும் ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கூற அவர்களும் அது போலவே ஆலயத்தைக் கட்டினார்கள். அந்த ஆலயத்தில் ஆலய மணிகளைத் தவிர கடவுளிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. அந்த ஆலய மணியைக் கூட பக்தர்கள் தந்து இருந்தனர்.<br />ஒரு முறை ஒரு திருடன் அந்த ஆலயத்துக்கு வந்து அங்கிருந்த மணியை திருட முயன்றான். சங்கிலிக் கறுப்பர் ஒரு சிறுவன் வேடத்தில் ஊருக்குள் சென்று அந்த விஷயத்தை ஒரு முதியவரிடம் கூற அவர் ஆட்களைத் திரட்டி வந்து திருடனைப் பிடித்தார். அது முதல் அந்த ஊரில் திருட்டு பயமே இல்லையாம். <br />அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆயிரம் அடித் தோண்டினாலும் நீர் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது . சங்கிலிக் கறுப்பர் ஒரு பக்தரின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டுமாறு கூற 150 அடிக்கும் குறைவான அளவில் நிறைய தண்ணீர் வந்ததாம்.<br />சங்கிலிக் கறுப்பர் ஒப்புக் கொண்டால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். அனைவரும் ஆலயத்தின் முன் வந்து கூட அவர் வைத்துள்ள கத்தியில் இருந்து பல்லி கூவினால் விழா நடைபெறுமாம். மூன்று மாதங்களுக்கு முன்பே விழாவிற்கான ஏற்பாடுகளை துவக்கி விடுகின்றனர். ஊரில் உள்ளவர்கள் வெளி ஊருக்கு செல்ல மாட்டார்கள். மற்றவர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள் ஆயிரம் ஆடுகள் பலி தரப்படும். பெண்கள் ஆலயத்தின் பக்கம் கூடப் போக மாட்டார்கள்.<br />N.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-25291567523960292452010-04-13T06:12:51.920-07:002010-04-13T06:12:51.920-07:00This comment has been removed by the author.N.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.com