tag:blogger.com,1999:blog-7135976914229922195.post5545639624830671441..comments2024-03-21T08:54:12.680-07:00Comments on Village Gods of Tamil Nadu: Mandu Karuppu-Mandu Karuppi of JeyamangalamRaja Thathahttp://www.blogger.com/profile/09656365715443764793noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7135976914229922195.post-63488371269892870982010-03-28T06:53:23.542-07:002010-03-28T06:53:23.542-07:00மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள...மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.<br /><br />ஜெயமங்கலத்து மண்ட கருப்பும் மண்ட கறுப்பியும்<br />பீ. ஆர். ராமச்சந்திரா<br /><br />தேனீ மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள வராஹ நதியின் கரையில் உள்ளது ஜெயமங்காலம் என்கின்ற கிராமம். மண்ட கருப்பு மற்றும் மண்டக் கறுப்பிக்கு அந்த கிராமத்தில் ஆலயம் உள்ளது. கோளச்சியவன் என்கின்ற தலித்துகளின் கிராம தேவதை அது. அதுதோன்றிய காலம் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. <br />வத்தலங்குண்டு என்ற இடத்தின் அருகில் உள்ள ஜோதிநாயக்கனூர் என்ற ஊரில் ஒரு ஜமீந்தார் இருந்தார். அந்த ஊரில் இருந்த மண்ட கருப்பு என்பவர் அவருக்கு எதிரானவர். அவன் தனக்கு என ஒரு பிரிவினரை வைத்துக் கொண்டு அந்த ஜமீன்தாரை எதிர்த்து வந்தான். ஒரு முறை அவருக்கு வரி கொடுக்க மறுத்தான். ஆகவே ஜமீந்தார்அவனை பிடித்து வர ஆட்களை அனுப்பினார். அவன் காட்டுக்குள் தப்பி ஓடி அங்கிருந்தபடியே ஜமீந்தாருக்கு தொல்லை தந்து வந்தான். அவன் அந்த ஊரில் இருந்த மண்டை கறுப்பி என்பவளை காதலித்து வந்தான். அவள் அடிக்கடி காட்டுக்குச் சென்று அவனை சந்தித்து வந்தாள். அது ஜமீன்தாரின் ஆட்களுக்குத் தெரிய வந்தது. . ஆனாலும் அவள் அதை குறித்து கவலைப்படவில்லை. ஆகவே அவளை பிடித்து வந்த ஜமீன்தாரின் ஆட்கள் அவன் மறைந்து உள்ள இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களைக் கேட்டார்கள். ஆனால் அவள் அதை கூற மறுத்து விட்டாள். ஆகவே அவளை பிடித்து வந்து அவளுடைய தலை மயிரை அறுத்து எறிந்தனர். பூமியில் விழ இருந்த அவளுடைய கூந்தல் ' மண்ட கருப்பு, இனி நீதான் காப்பாற்ற வேண்டும்' எனக் கத்திக் கொண்டே வானத்தில் பறந்து சென்று மண்ட கருப்பனின் கால்களில் விழ அவன் இருப்பிடத்தை கண்டு பிடித்தஜமீன்தாரின் ஆட்கள் அவனை கைது செய்து அவன் தலையை வெட்டி எறிந்தனர்.<br />அங்கிருந்த மக்கள் மண்ட கருப்பன் மற்றும் மண்ட கருப்பியின் வெட்டப்பட்ட தலையை எடுத்து வைத்து பூஜித்தனர். அவர்கள் எங்கு சென்று வசித்தாலும் அவன் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்துச் சென்று அதைப் போட்டு அதன் மீது இரண்டு கற்களை வைத்து அவர்களை தமது தேவதையாக நினைத்து வணங்கினார்கள். அதில் தோன்றியதுதான்ஜெயமங்கல ஆலயமும். அந்த ஆலயத்தில் திருவிழாவோ, வழிபாடு முறைகளோ கிடையாது.<br />அவர்கள் இனத்தில் எவருக்கு திருமணம் நிச்சயம் ஆகின்றதோ அவர்கள் வீடு மணமகன் அந்த ஆலயத்துக்குச் சென்று மண்ட கறுப்பிக்கு எண்ணை தேய்த்து அதை சோப்புக் காயால் ( பூந்திக் கொட்டை ) அலம்பி விட்டு வருவான். அதன் பின் மணமகள் சென்று அதைப் போல மண்டக் கருப்பனுக்கு செய்து விட்டு வருவாள். அதன் பின் திருமணம் ஆனதும் இருவரும் சேர்ந்து போய் அது போலவே இருவருக்கும் செய்தப் பின் அங்கு விளக்கு ஏற்றி விட்டு வருவார்கள்.<br />ஏழை பணக்காரன் இன்றி அந்த ஜாதியில் அனைவரும் அதை கடை பிடிப்பார்கள். ஏன் எனில் அப்போதுதான் அவர்களும் மண்டை கருப்பன்- மண்டை கறுப்பி போல ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பார்களாம்.<br />(Translated into Tamil by Santhipriya )Demo bloghttps://www.blogger.com/profile/08994794093382138871noreply@blogger.com